காவிரி நதிநீர் பிரச்சினை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கருநாடக அரசு மதிக்க வேண்டாமா? அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

1 Min Read

அரசு, தமிழ்நாடு

வேலூர், நவ. 1- கருநாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல கருநாடகா நினைக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் சாடினார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேற்று (31.10.2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், சாதாரண பொதுமக்கள் எப்படி சட்டத்திற்கு பணிவார்கள். ஆளுநரின் போக்கு முற்றிலும் சரியில்லை. ஆனால் இந்த விளையாட்டை ஒன்றிய அரசு, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வேடிக்கை பார்ப்பது சரியல்ல” என்றார்.

தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கருநாடகாவில் இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு சலுகை கேட்கிறோம் என நினைக்கிறார்கள். அதுவும் அல்ல.. இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், அது விதித்த விதிப்படிதான் நாட்டு மக்கள் நடக்க வேண்டும். ஆனால், ஒரு அரசாங்கமே நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *