சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுடன் சண்டை

1 Min Read

சிதம்பரம், பிப்.19 சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தீட்சிதர்களுடன், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 சிதம்பரத்தில்   நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் படி பக்தர்கள் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று (18.2.2023) சிவராத்திரியையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால்,  சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் ஜெயசீலா என்ற பெண் உள்ளிட்ட சில பக்தர்கள், சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதைப் பார்த்த தீட்சிதர்கள் அவர்களை சித்சபையில் ஏறவிடாமல் வெளியேற்றினர். 

இதனால் தீட்சிதர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர்  ரகுபதி, நகர காவல் ஆய்வாளர்  ஆறுமுகம் மற்றும் காவல் துறையினர் கோவிலுக்கு விரைந்து வந்து தீட்சிதர்கள் மற்றும் பக்தர்களை சமாதானப்படுத்தினர். அப்போது காவல்துறையினர் அரசாணைப்படி பக்தர்களை சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். இதையேற்ற தீட்சிதர்கள், மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்களை சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *