சென்னை, பிப்.19- ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் உயர்கல்வி பயிலுவதற்கான கல்வி உதவித் தொகைகள் ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனங்களின் தன்னார்வ அமைப்பான – சக்தி தேவி அறக்கட்டளையின் 23ஆம் அய்ம்பெரும் விழாவில் வழங்கப்பட்டன. சிறந்த தொழில் முனைவோர்களான இந்நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சாந்தி துரைசாமி, தலைவர் முனைவர் பி.சி.துரைசாமி, பண்ணாரி அம்மன் நிறுவன குழுமத் தலைவர் எஸ்.வி.பால சுப்ரமணியம், வாசவி மருத்துவமனையின் கவுரவ செயலர் சிறீராமுலு, அரிமா என்.முத்துசாமி, டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று ஒரு கோடியே 24 லட் சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர்கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில் பொது வாழ்வில் சிறப்பாகப் பணி புரிந்தமைக்காக இந்திய புலனாய்வுத் துறை மேனாள் இயக்குநர் டாக்டர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.