தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

அம்மாபேட்டை, பிப். 20- ஈரோடு (3.2.2023) முதல் கடலூர் (10-.3. 2023) வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும்  சமூகநீதி பாதுகாப்பு  திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 17.2.2023  அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை  சாலியமங்கலத்தில் மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர்  அ. உத்ராபதி, ஒன்றிய தலைவர் கி.ஜவகர், ஒன்றிய துணைச் செயலாளர் வை.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செ.காத்தையன், நகர தலைவர் துரை அண்ணா, துரை,  சாலியமங்கலம் பன்னீர்செல்வம், சுடரொளி ஆகிய முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்களை சந்தித்து பரப்புரைப்பயணத்தின் பொதுக்கூட்டப் பிரச்சாரப்பணி நடைபெற்றது.  

நிகழ்ச்சி சிறக்க  நன் கொடை வழங்கியவர்கள் சாலியமங்கலம் தொழி லதிபர்  மகான் பாபா அரிசி ஆலை உரிமையாளர் முகமது அயூப் அவர்கள் ரூ.20,000  ஆயிரம் சாலியமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் மதுமதி மணிகண்டன் ரூ.1,000 சாலியமங்கலம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மா.சாமிநாதன் B.Com ரூ1000 திருப்புவனம் ஊராட்சி மன்ற தலைவர் 1000 பால  கண்ணன்  அம்மாபேட்டை சாலிய மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து நிகழ்ச்சி சிறக்க நன்கொடை வழங்கி பேராதரவினை வழங்கி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *