கடவுள் சக்தி இதுதான்!

1 Min Read

கோயிலுக்குச் சென்றபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிழப்பு 

நாகை, பிப்.21- மதுரையில் இருந்து குலதெய்வ வழிப்பாட்டிற்குச் சென்ற வர்கள் தேவிப்பட்டினம் கடலுக்குள் சற்று தொலைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு தடுமாறியது. படகில் இருந்து மணிமேகலை (வயது 54), இருளாளி(56) ஆகிய 2 பேரும் தடுமாறி கடலுக்குள் விழுந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற படகில் இருந்த உறவினரான பொறியாளர் முத்துமாரி(33) என்பவர், கடலில் குதித்தார். 

அவரும் கடலில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இரண்டு பெண்களின் உடலும் கரை ஒதுங்கியது.

கடலில் மூழ்கிய முத்துமாரியின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *