பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்

2 Min Read

தமிழ்நாடு, மற்றவை

தமிழ்நாடு, மற்றவை

தமிழ்நாடு, மற்றவை

திருச்சி, பிப். 22- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21-02-2023 (செவ்வாய்க்கிழமை)  காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர்  அரங்கில், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் தமிழ் மன்றம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டது.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கலைச்சொற்கள் கூறுதல், 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “காய்கறிகளில் கலை வண்ணம்” போட்டி,  6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு “செம்மொழித் தமிழ் மொழி” எனும் தலைப்பிலான பேச்சுப் போட்டி ஆகிய போட் டிகள் நடத்தப்பட்டன.

முத்தாய்ப்பாக, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள்; பங்கு பெற்ற “இன்றைய சூழலில் தமிழ்மொழி வளர்கிறதா?  வீழ்கிறதா? எனும் தலைப்பிலான சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபெற்றுத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளி முதல்வர் டாக்டர் க.வனிதா பாராட்டியதோடு, அனைவருக்கும் தாய்மொழி நாள் நல் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளி தமிழ் மன்றப் பொறுப்பாசிரியை திருமதி.கனிமொழி சிறப்பாகச் செய் திருந்தார். 

‘மாணவர் பல்திறன் நிகழ்ச்சி“

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 21-.2.2023 (செவ்வாய்கிழமை)  காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் அரங்கில், ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் திறமைகளை அரங்கேற்றும் வகையில்   ‘மாண வர் பல்திறன் நிகழ்ச்சி“ நடை பெற்றது.

மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்குப் பள்ளி முதல்வர் டாக்டர்.க.வனிதா தலைமை ஏற்றார். பள்ளியின்  ஒன்றாம் வகுப்பு மாணவர் செல்வன்.மிதுன் விநாயக் வர வேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தோரை வரவேற் றார்.

நிகழ்வில் தமிழ், ஆங்கிலப் பாடல்கள், கதை சொல்லல், விடுகதை சொல்லல், கணிதப் புதிர்கள், எண் விளையாட்டு போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள், தங்களின் பல் துறை சார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாள ராக வருகை புரிந்திருந்த பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

நிகழ்வின் இறுதியாகப் பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி செல்வி வித்யாசிறீ நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *