ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அதானி பிரச்சினையில் பாஜக பயந்து விட்டது. எனவே பிரச்சினைகளை திசை திருப்புகிறது – ராகுல் காட்டம்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க அறிவுறுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு வழக்கு. உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

* ஆர்.எஸ்.எஸ்.-இன் விருப்பத்திற்கு ஏற்ப பாஜக சர்வாதிகாரத்தை  நோக்கிச் செல்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* என்னை கைது செய்ய முடியுமா என சவால் விட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, நவம்பர் 3ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்: 

* பல்வேறு மதப் பிரிவினரிடம் பகையை வளர்த்ததாக பாஜகவின் அனில் ஆண்டனி மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு.

* கவுதம் அதானிக்கு சொந்தமான தொழில்துறை குழுமத்திற்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் – அய்.போன் நிறுவனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மோடி அரசு மீது கண்டனம்.

தி இந்து: 

* கருநாடக மாநிலத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரான தத்துவங்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மாநில முதல மைச்சர் சித்தராமையா எச்சரிக்கை.

தி டெலிகிராப்:

* அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் தேர்தல் பத்திரத் திட்டம், ஊழலை ஊக்குவிப்பதால், “ஜனநாய கத்தை அழித்துவிடும்” என்றும், ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தாது என்றும், இந்தத் திட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.

* உத்தரப் பிரதேசத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில், சிறுபான்மை சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி மாணவர்களை அறையத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர் மீது வழக்குத் தொடர உத்தரப் பிரதேச அரசு உடனடியாக முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *