அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக வீழ்ச்சி

Viduthalai
1 Min Read

அரசியல்

மும்பை, நவ.1- கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக சரிந்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 236 கோடி டாலர் சரிந்து 58,353 கோடி டாலராக உள்ளது.

கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் முந்தைய வாரத்தில் அது 115.3 கோடி டாலர் அதிகரித்து 58,589.5 கோடி டாலராக இருந்தது. 

அக்டோபர் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வந்தது.

கடந்த 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 415 கோடி டாலர் சரிந்து 51,520 கோடி டாலராக உள்ளது.

டாலர் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும். மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 185 கோடி டாலர் அதிகரித்து 4,542 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 7 கோடி டாலர் சரிந்து 1,793 கோடி டாலராக உள்ளது. பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 60 லட்சம் டாலர் அதிகரித்து 498 கோடி டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *