ஆங்கிலம் வேண்டாம், சரி! ஹிந்தி மட்டும் என்ன?

1 Min Read

உலகத் தாய்மொழி நாளான 21.2.2023 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலத்தை அதிகம் பயன்படுத்திய அமித்குமார் என்ற விவசாயி ஒருவரை “நாம் இருப்பது பீகார். இங்கே ஹிந்தியில் பேச வேண்டாமா? ஏன் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகிறீர்கள் இது என்ன இங்கிலாந்தா?” என்று கேட்டுத் திருத்தியுள்ளார் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்.

பீகார் மாநிலத்தின் மாநில அலுவல் மொழியாக ஹிந்தி இருப்பதால் அவரது கோபம் நியாயமானதாக கூட தோன்றக்கூடும். ஆனால் அந்த மாநிலத்தின் 26.89% மக்கள் பேசும் மைதிலி மற்றும் 24% மக்கள் பேசும் போஜ்புரியும் இன்னும் இருக்கும் இதர மொழிகளும் பீகாரின் சொந்த மொழிகளாக இருக்க, கற்றவர் மத்தியில் உலவும் ஹிந்தி 25.6% என்ற அளவில் மட்டுமே இருந்தாலும் அதுவே மாநிலத்தின் மொழியாக மாறிப் போயிருக்கிற அவலத்தை தாய்மொழிகள் நாளில் பீகார் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 

பீகாரில் பேசப்படும் பல போஜ்புரி மொழிகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஹிந்தியின் துணை வட்டார மொழிகளாகக் கருதப்பட்டு ஹிந்தியின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மிகப்பெரும் மோசடியாகும்.

ஹிந்தியை நுழைய விட்டால் மாநில மொழிகள் எப்படி நசுக்கப்படும் என்கிற அவலத்திற்கும் பீகார் ஒரு சான்று. பீகாரில் இருந்து பிற மாநிலங்கள் பாடம் கற்க வேண்டும்.

– ஈரோட்டுக் கண்ணாடி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *