மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

சென்னை, பிப்.24 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாத வரம் – கெல்லீஸ் வழித் தடத்தில் 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறை வடைந்துள்ளது. 

சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில்  மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடமான மாதவரம் – சிறுசேரி சிப்காட் 3-ஆவது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. 

சுரங்கப்பாதையில் 29 நிலையங்களும், உயர் மட்ட பாதையில் 20 நிலையங்களும் என மொத்தம் 49 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில், முதல் சுரங்கம் துளை யிடும் பணி மாதவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை – கெல்லீஸ் பாதையில் தற்போது 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாத வரம் – கெல்லீஸ் வரை 9 கி.மீ. தொலைவுக்கு சுரங் கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இருமார்க்கமாக மொத் தம் 18 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. மொத்தம் 18,551 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண் டும். இதில் தற்போது வரை 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. மாதவரத்தில் சுரங்க ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. முராரி மருத்து வமனை, பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, புரசைவாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அடர்த்தி அதிக முள்ள இப்பகுதியில் எவ்வித தொந்தரவும் இன்றி சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள் ளப்படுகிறது. பெரும்பாலான பணிகள் இரவில் நடைபெறுகிறது. சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 18 முதல் 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *