சிவகாசி ம.சிவஞானம் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

இரங்கல் அறிக்கை

சிவகாசி நகரக் கழக காப்பாளர் பெரியார் பெருந்தகையாளர் ம.சிவஞானம் (வயது 85) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய் தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். 

கரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். அவரது உடல் விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்குக் கொடையாக வழங்கப்பட உள்ளது. அவருக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர்.

தோழர் சிவஞானம் அவர்களின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் ஆறுதலும் உரித்தாகுக!

– கி.வீரமணி,

தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், மறைந்த சிவஞானம் அவர்களின் மகன் ஆனந்தம் அவர்களிடம் தொலைபேசியில் உரையாடி ஆறுதல் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *