கோவை தெற்கு பகுதி கழக கலந்துரையாடல்

1 Min Read

மற்றவை

கோவை, பிப். 24- கோவை தெற்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 22.02.2023 அன்று மாலை 7.00 மணியள வில் குறிச்சி பெரியார் பாசறையில் பகுதிக் கழக செயலா ளர் தெ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலை வர் தி.கசெந்தில்நாதன், மாவட்ட கழக காப்பாளர் ம.சந்திரசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுல்,மண்டல செயலாளர் ச.சிற்றரசு,மாநகர தலைவர் வே.தமிழ் முரசு, மாந கர அமைப்பாளர் இரா.வெங் கடேசன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக  செயலாளர் அக்ரி.அ.நாகராஜ் மாவட்ட தொழிலாளர் அணி செயலா ளர் ஆர்.வெங்கடாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரா.சி.பிரபாகரன், பகுத்தறிவாளர் கழகம் சிவக்குமார், இலைக் கடை செல்வம், முத்துகணேசன், ந.குரு, ஆவின் சுப்பையா, ஜெ. வடிவேல்  ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண் டார். இறுதியாக பிள்ளையார் புரம் ஆனந்த் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தீர்மானம் 1: கழகத்தின் தெற்கு பகுதி செயல்வீரர் பெயிண்டர். ஆறுமுகம் அவர்க ளின் மறைவிற்கும், கு.வெ.கி ஆசான் அவர்களின் துணைவி யார் பேராசிரியர் சாரதாமணி அம்மையார் அவர்களின் மறை விற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கின்றது

தீர்மானம் 2: கோவை தெற்கு பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும்  தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *