ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: முதலமைச்சர் ஈரோட்டில் ஆதரவு திரட்டினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈரோடு, பிப். 25- ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (25.2.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர் திருமகன் ஈவெரா மறைவால் வெற்றிடமாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்  திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடு கிறார். இந்த தொகுதியில் சுயேச் சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகி றார்கள்.  இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளராக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனை ஆதரித்து அமைச்சர்கள், தலைவர்கள்,  காங் கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்து வருகி றார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின் இன்று (25.2.2023) காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனுக்கு ஆதரவாக இறுதிக் கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். இதற்காக  சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் ஈரோடு வந்தார். 

முதலமைச்சர் காலை 9 மணிக்கு பரப்புரையைத் துவக்கினார்  முதலில் சம்பத் நகர், பெரியவலசு, பாரதி தியேட்டர், சத்தி ரோடு, பேருந்து நிலையம், மஜீத் வீதி வழியாக மக்களை சந்தித்தார். கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் காலை 10 மணிக்கு உரையாற்றினார்.

அங்கிருந்து கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக 11 மணிக்கு பி.பி.அக்ரகாரம் பகுதியில் வாக் காளர்களைச் சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *