எழுத்தாளர் இராம்குமார் சிங்காரத்திற்கு, தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது !

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, பிப்.25- சுய முன்னேற்ற எழுத்தாளர் இராம்குமார் சிங்காரம் எழுதிய “நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர் ஆகவில்லை?” என்ற தன்முனைப்பு நூலுக்கு, தமிழ்நாடு அரசின்  2019ஆம் ஆண்டிற்கான  சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

அண்மையில் 21.2.2023 அன்று சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.அய்.இ.டி. மகளிர் கல்லூரியில் நடந்த உலகத் தாய்மொழி நாள் விழாவில், இந்த விருதினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின்  அரசுச் செயலர் மரு. இரா. செல்வராசு  வழங்கினார்.

இந்நூலைப் பதிப்பித்த “தாய் பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெடிற்கு” சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும்  வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர்  முனைவர் ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் இரா. சந்திரசேகரன், எஸ்.அய்.இ.டி. மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியருமான முனைவர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *