சிவகாசி ம.சிவஞானம் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

சிவகாசி, பிப். 25- சிவகாசி நகர கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ம.சிவஞானம்  (வயது 85) 24.2.2023 வெள்ளி அதி காலை 5 மணியளவில் உடல்நலக்குறைவு கார ணமாக இறுதி எய்தினார். 

மாவட்ட கழக செய லாளர் விடுதலை தி. ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி, மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி, சிவகாசி நகரச் செயலாளர் து.நர சிம்மராஜ், தலைவர் மா. முருகன், அமைப்பாளர் பெ.கண்ணன், மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி, நகர கழக இளைஞரணி அமைப்பாளர் ஜீவா முனிஸ்வரன், தோழர் மணிமாறபூபதி மற்றும் தோழர்கள் அன்னாரது இல்லம் சென்று கழகக் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். 

பரப்புரைப் பயணத் தில் தூத்துக்குடியில் தங் கியிருந்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியறிந்து தொலைபேசி வழி இல் லத்தாருடன் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங் கலுடன் ஆறுதல் கூறி னார். 

மாலை 6 மணியள வில் தோழர்களின் வீர வணக்க முழக்கத்துடன் இறுதிப் பயணம் தொடங் கியது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில்  இல்லத்தார் தோழர்கள் உறவினர்கள் சூழ அன் னாரது உடல் கொடை யாக வழங்கப்பட்டது. உடற்கொடை பெற்றுக் கொண்ட மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் குடும்பத்தினருக்கும், கழகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *