திராவிடர் கழக அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி செயலாளர் காரல்மார்க்ஸ் தாயார் ஜெயந்தி (வயது 50) உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தாயாரை இழந்து வாடும் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம்.
தகவலறிந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், காரல் மார்க்சிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.