பெரியார் 1000 பரிசளிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம்

1 Min Read

அரசியல்

கிருஷ்ணகிரி, பிப். 25- பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 22.2.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் குரு பரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சத் தியமூர்த்திக்கு மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் சால்வை அணிவித்து  சிறப்பு செய்தார்.

பரிசு பெற்ற மாணவர்களுக்கு நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் நாகராசன் பதக்கங்களை வழங் கினார். கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ.தங்கராசன் தலைமை ஆசிரி யரிடம் பள்ளிக்கு பெரியார் படத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் இலட்சுமி, பெரியார் ஆயிரம் தேர்வை ஒருங்கிணைத்து நடத்திய ஆசிரியர் மதலை முத்து, முதுகலை ஆசிரியர் ரோஜம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *