செய்திச் சுருக்கம்

1 Min Read

திட்டம்

பயணிகளின் பொருள்களை பாதுகாக்க, ரயில்களில் டிஜிட்டல் மார்ட் லாக்கிங் சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த இந்தியன் ரயில்வே துறை முடிவு.

சேலத்தில்…

சேலம் மாவட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது தொடர்பான ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடியும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தகவல்!

கீழடி

கீழடியில் உலகத் தரத்துடன் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தகவல்.

சைக்கிளிங்

சென்னை பெருநகருக்கான மாஸ்டர் பிளானில் சைக்கிளிங் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

இல்லத்தில்

வயது முதிர்ந்த மேனாள் படை வீரர்கள், போரில் கணவரை இழந்தவர்கள் ஆகியோர் சென்னை மயிலாப்பூர் நிம்மதி இல்லத்தில் தங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தகவல். தொடர்புக்கு 044-22350780

கப்பல் போக்குவரத்து

புதுச்சேரி – சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கிய நிலையில் வாரத்தில் 2 நாள்கள் இயக்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *