ஆளுநர் எங்கு சென்றாலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! – சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

2 Min Read

அரசியல்

கோவை. பிப், 27- தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி போனாலும், எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கார்ல் மார்க்ஸ் குறித்து அவதூறாக  பேசியதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் 25.2.2023 அன்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்டக்குழு செயலா ளர்கள், அக்கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி முழக்கங் களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “மார்க்ஸ் மற்றும் டார்வினை கடுமையாக  விமர்சித்து அவதூறாக ஆளுநர் பேசியுள்ளார். அரை குறையாக புரிந்து கொண்டு பேசிய ஆளுநருக்கு நாங்கள் அறிவு பூர்வமாக பதிலளிக்க உள்ளோம். ஆளுநர், கார்ல் மார்க்சை விமர்சித்து பேசி இருக்கிறார். அறிவியலாளர் சார்லஸ் டார்வினை கடுமையாக விமர்சனம் செய்துள் ளார். அவருக்கு மார்க்ஸ் மற்றும் டார்வினை பற்றி ஒன்றும் தெரியாது. அவர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகாரர். ஆளுநரின் சட்டையை கழட்டி விட்டு, அவர் ஆர்எஸ்எஸ்காரராக பேசட்டும். இந்திய விடுதலைப் போராட் டத்தில், ஆர்எஸ்எஸ்-க்கு என்ன பங்கு உள்ளது? ஆர்எஸ்எஸ், பிஜேபி தொண்டர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர், வருத்தம் தெரிவிக்கின்ற வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் தொட ரும்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இளையோருக்கு மார்க்ஸ் கதை என்ற புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். அப்போதாவது கார்ல் மார்க்சை பற்றி ஆளுநர் ரவி தெரிந்து கொள்ளட்டும். அவர் ஆளுநராக இருக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதியாக இருக்கக் கூடாது. மார்க்சியத்தை எவ்வளவு பேர் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் உலகத்தில் எவ்வளவு தத்துவங்கள் தோன்றினாலும், மார்க்சியம் தான் அதில் முதன்மை பெறுகிறது என்பதை பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விடுதலைப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். நாங்கள் பிரிட்டிசுக்கு சேவை செய்கிறோம் என்று எழுதிக் கொடுத்தவர்தான் சாவர்க்கர்.

கார்ல் மார்க்சை பற்றி பேச ஆளுநர் ரவிக்கு அருகதை கிடையாது. தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி போனாலும், எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக்கொடி காண்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *