காவி உடையில் கோவிலில் கொள்ளையடித்த பக்தர்கள்

1 Min Read

அய்தராபாத்,பிப். 27- தெலங்கானாவின் ஜகதியல் மாவட்டத்தில் உள்ள கொண்டாகட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் உள்ளது. அங்கு, 20.2.2023 அன்று   அதிகாலை கோவில் கருவறையில் இருந்த 5 கிலோ வெள்ளிப் பொருட்களை, சில நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், கோவில் வளா கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், காவி உடையில் வந்த மூன்று நபர்கள், பின்பக்க வாயில் வழியாக சென்றதை கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

மதவாத கண்ணோட்டத்தில் 

மராட்டியத்தில் ஊர்களின் பெயர் மாற்றம்

மும்பை, பிப். 27- மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.  இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறை வேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. அதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும். இந்த தகவலை துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *