பெரியார் 1000 வினா-விடை போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 22.2.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நகர தலைவர் கோ.தங்கராசன் பதக்கங்களை வழங்கினார். நகர பகுத்தறி வாளர் கழக செயலாளர் நாகராஜன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சொர்ணமுகியிடம் மாவட்ட செயலாளர் மாணிக்கம் பெரியார் படத்தை வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பெரியார் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தெய்வானை, மஞ்சுளா, வள்ளி, பாரதிதேவி, மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் 1000 – மாணவர்களுக்கு பரிசளிப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books