விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது பா.ஜ.க.வின் தேசியக் கொள்கை : பிருந்தா காரத்

2 Min Read

புதுடில்லி, பிப்.28- விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைக்கும் பா.ஜ.க.வின் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மணிஷ் சிசோடியாவின் கைது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார்.

டில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிடம்  ஒன்றிய புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) சுமார் 8 மணி  நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியது. பின்னர் அவரை அதிரடியாக கைது செய் தது. சிசோடியாவின் பதில்களில் திருப்தி இல்லை மற்றும் கேள் விகளுக்கு விளக்கங்களை தவிர்த் தது போன்ற காரணங்களால் அவரை கைது செய்ய வழிவகுத்தது என்று சி.பி.அய். தெரிவித்தது 

இந்நிலையில், மணிஷ் சிசோ டியா கைது குறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், அந்த கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை நாங்கள் வன் மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க. வால் வாக்குகளின் அடிப்படையில் அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது என்றால், எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்க அல்லது எதிர்க்கட்சி அரசாங்கம் இயங்கும் இடத்தை குறிவைக்க சி.பி.அய், அமலாக்கத்துறை மற்றும் வரு மான வரித்துறை ஆகியவை  பயன்படுத்தப்படுகிறது. மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் ஏனென்றால் அது பா.ஜ.க.வின் தேசியக் கொள்கை, உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என் றால், எதிர்க்கட்சி தலைவர்களை யும், எதிர்க்கட்சி தலைமையின் கீழ் இயங்கும் அரசுகளையும் குறி வைத்து தாக்குகிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்

மணிஷ் சிசோடியா கைது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், பெரும்பாலான சி.பி.அய். அதி காரிகள் மணிஷ் சிசோடியா கைதுக்கு எதிராக இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அனைவரும் அவர் (மணிஷ் சிசோடியா) மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஆதராமும் இல்லை. ஆனால் அவரை கைது செய்வதற்கான அரசியல் அழுத்தம் மிக அதிகமாக இருந்ததால் அவர்கள் (சி.பி.அய். அதிகாரிகள்) அரசியல் எஜமானர்களுக்கு கீழ் படிய வேண்டியிருந்தது என பதிவு செய்து இருந்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *