மதுரை எய்ம்ஸ் தலைவராக உ.பி. மருத்துவர் நியமனம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப். 28-  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொள்ள உள்ளது. கட்டுமானப் பணி 2024ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 2028இல் முடிவடையும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டும், இரண்டா வது ஆண்டாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் கடந்த ஆண்டு செப்டம்பரில் நியமனம் செய்யப்பட்டார். அவர் உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவனைக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் உத்தரப்பிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *