புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!

1 Min Read

அரசியல்

சென்னை, பிப். 28- உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, 26.2.2023 அன்று மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது. பள்ளிக்கரணை காவல் நிலைய சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆர் ஆல்பின் ராஜ் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனைகளின் குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். 

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி கூறுகையில், “புற்றுநோய் சிகிச்சை மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதே இந்த நிகழ்ச்சியின் குறிக்கோளாகும் என்றார். பல மூத்த மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பலர் என 450 பேர் மாரத்தானில் பங்கேற்றனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *