…..செய்தியும், சிந்தனையும்….!

1 Min Read

நடந்தது மறந்து போயிற்றா..?

⭐மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக யாகம் தொடங்கினார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

>>ஏற்கெனவே நடத்திய யாகத்தில் தீ விபத்து நடந்தது மறந்து போயிற்றா?

கலைஞர் கூறியதுதான்…

⭐இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு நிலையான அரசே காரணம்.

– சொல்லுகிறார் பிரதமர் மோடி

>>ஹிட்லர் கூட நிலையான ஆட்சியைத்தான் நடத்தினார் என்று கலைஞர் கூறியதுதான் நினை விற்கு வருகிறது.

எதன்மீது சட்டப் போராட்டம்?

⭐ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம்.

– பி.ஜே.பி. அண்ணாமலை

>>ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று ஒன்றிய அரசின்மீது சி.ஏ.ஜி. கூறியிருக்கிறது; அதன்மீது சட்டப் போராட்டமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *