பெரியார் மருந்தியல் கல்லூரியில் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

அரசியல்

திருச்சி, மார்ச் 2- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து குறித்த விழிப் புணர்வு கருத்தரங்கம் மற்றும் தீத்தடுப்பு செயல் விளக்கப் பயிற்சி அரசு தீயணைப்பு துறையின் மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தீயணைப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி 15.02.2023 அன்று மதியம் 2 மணி யளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

இதில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு உபகரணங்களை பயன்படுத் தும் விதம் மற்றும் அலுவலகங்க ளிலோ, பொது இடங்களிலோ தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண் டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் இயக்குநர் பேராசிரியர் ச. இராஜேஷ் அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மருந்தியல் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை மருந்தியல் மாணவர்கள், சோதனைக்கூட ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *