அதானி: முறைகேடு விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை

2 Min Read

புதுடில்லி, மார்ச் 3 அதானி குழும நிறுவனங் களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதானி குழுமம் பல்வேறு முறைகேடு களை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற் றுள்ளதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங் களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அர சியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அதானி குழும விவகாரம் தொடர் பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

மீண்டும் விசாரணைக்கு

ஹிண்டன்பர்க் நிறுவநர் நாதன் ஆண்டர் சனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 

டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமர் வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதானி – ஹிண்டென் பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மேனாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறி முறை குழு தேவை என்பதை உணர்கிறோம். மேனாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில், மேனாள் நீதிபதிகள் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் இந்த சிறப்பு நிபுணர் குழுவில் இடம் பெறுவார்கள். 

பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந் துள்ளது. சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசா ரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண் டும். விசாரணை நடத்த அமைக்கப்பட் டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு ஒன்றிய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரி வித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *