தந்தை பெரியார், அன்னை மணியம்மையார். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மரியாதை

1 Min Read

 

அரசியல், தமிழ்நாடு, திராவிடர் கழகம்

அரசியல், தமிழ்நாடு, திராவிடர் கழகம்

அரசியல், தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ஈ.வெ.கி.ச.இளங்கோவன், அவர் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் இன்று (3.3.2023) பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர்.

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி தேர்தல் வெற்றிக்குப் பாராட்டுத் தெரிவித்தார். 

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மரியாதை செலுத்தினார்.  

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர்கள் என்.ரெங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், ஏ.ஜி.சிதம்பரம், க.வீரபாண்டியன், பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *