7 சென்னை பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 3 சேப்பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத் திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி  திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு நேற்று (2.3.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம் பாட்டு நிதியின்கீழ்,இந்த சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 7 சென்னை பள்ளிகளில் உள்ள28 வகுப்பறைகளில் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் உயர்தர அறிவுத் திறன் வகுப்பறைகள் (ஷினீணீக்ஷீt சிறீணீss) அமைக்கப்படுகின்றன. 

இதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்ட லம், வார்டு 114-க்கு உட்பட்ட சேப் பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

இந்த வகுப்பறையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட் டுள்ள திரைப் பலகையின் (ஷினீணீக்ஷீt ஞிவீரீவீtணீறீ ஙிஷீணீக்ஷீபீ) மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். நவீன தொழில் நுட்பத்துடன் திரையின் மூலமாக பாடங்கள் கற்கும்போது மாணவர் களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும். இந்த வகுப்பறையில் அமைக் கப்பட்ட நவீன தொழில்நுட்பத்திலான திரைப்பலகையின் மூலம் கற்பித்தல் செயல்பாடுகளை அமைச்சர் பார்வை யிட்டு மாணவர்களுடன் கலந்துரை யாடினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *