நீரிழிவு நோய் தடுப்பு தொடர்பான கூட்டு ஆராய்ச்சி திட்டம்!

1 Min Read

சென்னை, மார்ச் 3-  டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மய்யத்தின் ஒரு அங்கமான மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர், நீரிழிவு நோய் ஆராய்ச்சி தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேற்று (2.3.2023) வெற்றிகரமாக தனது பத்தாவது ஆண்டை சிறப்பாக கொண்டாடியது. இந்த கூட்டணி ஆராய்ச்சி கடந்த 2013ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு தொடர்பான ஆராய்ச்சியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மய்யம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் தலைமை நீரிழிவு நோய் தடுப்பு நிபுண ருமான டாக்டர் வி. மோகன் கூறுகையில்:-

டீக்கின் பல்கலைக்கழகத்துடனான மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் பத்தாண்டு காலமாக இணைந்ததை  குறித்து தற்போது நினைவுகூர்வது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மாணவர்கள் இந்தியாவிலேயே ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் மதிப்புமிக்க பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் தங்கள் பிஎச்டி படிப்பைத் தொடரவும்  ஒரு சிறந்த தளமாக விளங்கி வருகிறது என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *