பொறுமை, சகிப்புத் தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Viduthalai
3 Min Read

புதுடில்லி, மார்ச் 4  பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.  

டில்லியில் நடந்த பன்னாட்டு மயமாக்கல் காலத்தில் சட்டம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பொறுமை, சகிப்புக் தன்மை உள்ளிட்டவை தற்போது நாம் வாழும் காலத்தில் மக்களிடம் குறைந்து காணப்படுகிறது என சுட்டி காட்டி பேசினார். அவர் பேசும்போது, யாரேனும் சிலரால் கேலிக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்துடனேயே, நாங்கள் செய்ய கூடிய ஒவ்வொரு சின்ன விசயத்திலும் ஈடுபடுகிறோம். நான் கூறும் இந்த விடயங்களை நம்புங்கள். அப்படி, உங்களை கிண்டல் செய்கிறவர்கள், உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில்லை என்றும் கூறினார். தொடரந்து அவர், நாம் தற்போது வாழும் காலத்தில், மக்களிடையே பொறுமை குறைவாக உள்ளது. அவர்களிடம் சகிப்பு தன்மையும் வெகுவாக குறைந்து உள்ளது. அவர்களுக்கு பொறுமை குறை வாக உள்ளது என கூறும்போது, நான் சுருக்கமுடன் பேச வேண்டும் என அது எனக்கு நினைவூட்டுகிறது. 

வீட்டு வேலை செய்பவர்களும் ஊழியர்கள் தான். ஆனால், மக்களிடம் சகிப்புத் தன்மையும் குறை வாகவே உள்ளது. ஏனெனில் நாம், நம்மிடம் இருந்து வேறுபட்ட கருத்துகளை ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவே இருப்பதில்லை என்று பேசியுள்ளார். சமூக ஊடகத்தில், குறிப்பிடும்படியாக உலகின் மிக பெரிய குறுஞ்செய்திகளை பதிவிடும் டுவிட்டர் வலை தளத்தில், கேலி கிண்டல்கள் செய்யும் பிரச்சனைகள் கடுமையாக உள்ளன. அவற்றை தடுத்து நிறுத்துவ தற்கு கடுமையான சோதனைகள் மற்றும் நடை முறைகள் இருந்தபோதும், யார் வேண்டுமென்றாலும் அது போன்ற நபர்களால் இலக்காக கொள்ளப்பட கூடிய சூழல் உள்ளது என பேசியுள்ளார். இதுபோன்ற கேலி, கிண்டல்கள் செய் யப்படுவது சில சமயங்களில் மனித தாக்குதல்களில் கூட முடிந்து விடுகிறது. சமூக ஊடகத்தில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக் கைகள் உள்பட ஒவ்வொரு விசயத்திலும் தாக்கு தல்கள் நடத்தப்படும் விடயங்களை கவனத்தில் கொண்டு, கடந்த 2017-ஆம் ஆண்டில் அவற்றில் ஒழுங்குமுறை தேவை என உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி தவறான தகவல்களை பரப்ப சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தும் பிரச்சினையையும் உச்சநீதி மன்றம் அடையாளம் கண்டு கொண்டது. உச்சநீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளை கூடுதலாக நியமனம் செய்வது பற்றிய விவகாரத்தில், நிச்சயம் அதனை ஆதரிக்கிறேன் என்று கூறினார்.

4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம்   

யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழ்நாடு மீனவர்கள்

அரசியல்

யாழ்ப்பாணம், மார்ச் 4 இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகு களுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்புத் தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.

 இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளை, உரிமை யாளரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கு விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்புத் தொகை  செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. இதனை எதிர்த்து படகின் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதே சமயம் வழக்கு முடியும் வரை படகுகள் விடுவிக்கப்படாது என்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *