தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை

2 Min Read

– அமைச்சர் சி.வெ.கணேசன்

அரசியல்

சென்னை, மார்ச் 4- தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக் கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை,   சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என-  தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

பெருந் தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டு களாகவே தமிழ்நாட்டில் பெருமள வில் முதலீடு செய்து வந்து அதில்பலமாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமை தியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.

அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறை களிலும் வடமாநில தொழிலா ளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். 

அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிக ளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அர சின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதிசெய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக்கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ்மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்ப லுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்க ளின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமை தியான சூழ்நிலையில் இங்கு அனை வரும் வாழ்ந்து வரு கிறார்கள்.  

இந்தச் சூழ்நிலையில் சில சமூகவலைதளங்களில் உண் மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.  இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள் ளிட்ட அனைவரும் அறிவார்கள்.

தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர் பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடை பெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதி யாக, சிறப்பாகப் பணியாற்றி வரு கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். –

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *