பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் பெரியார் விருது

1 Min Read

அரசியல்

பட்டுக்கோட்டை, மார்ச் 4- பட்டுக் கோட்டை  அறம்  கல்வி மற்றும்  சமூக அறக்கட்ட ளையின் சார்பில் பட் டுக்கோட்டை லட்சுமி பிரியா திருமண மண்ட பத்தில் மாணவர்களுக் கான +2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என் கிற வழி காட்டும் சிறப்பு நிகழ்ச்சியும் பெரியார், அம்பேத்கர் காமராஜர், அப்துல் கலாம், ஆகிய தலைவர் களின் பெயரில் சாதனையாளர் களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ் வும்  சிறப்புடன் நடை பெற்றது.

பெரியார் விருது பட் டுக்கோட்டை நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகருக்கும், விடு தலை சிறுத்தை கட்சியின் தொகுதி செய லாளர் சக்கரவர்த்திக்கும், தமிழக மக்கள் கழகப் பொதுச் செயலாளர் தங்க.குமரவேலுக்கும் வழங்கப்பட் டது.

மேலும் பல்வேறு துறைகளில் சமூக சேவையாற்றிவரும்  சமூக சேவகர்களுக்கும் விருது கள் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்ற னர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் வேதவல்லி அவர்க ளும் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டு  மாண வர்களுக்கு சிறப் பான ஆலோசனைகளையும், சாத னையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *