சைபர் கிரைம் மூலம் வலைதளம் கண்காணிப்பு காவல்துறை தகவல்

1 Min Read

கோவை, மார்ச் 5 கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார், காவலர் சந்தோஷ் குமார் ட்விட்டர் சமூகவலைதள பக்கத்தை  கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது வதந்தி பரப்பிய காட்சிப் பதிவு மற்றும் வாசகத்தை கண்டனர்.

இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் சிவக்குமார், மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரில், ‘‘நாங்கள் ட்விட்டர் சமூக வலைதளத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தோம். அப்போது யுவராஜ் சிங் ராஜ்புட் என்ற பெயரில் காட்சிப் பதிவுடன் வாசகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டில் பீகார் மாநில சகோதரர்கள் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பீகார் அரசு அமைதி காக்கிறது. இந்த அரசு துன்புறுத்தலில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என ஹிந்தி மொழியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரு வகுப்பினருக்கு இடையே, வெறுப்பை வளர்த்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இப்பதிவு உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

அதன் பேரில், சைபர் கிரைம் காவல் துறையினர் யுவராஜ் சிங் ராஜ்புட் என்ற ட்விட்டர்  அடையாள எண் பெயர் உள்ள நபர் மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *