பாதுகாப்பாக உள்ளோம் – புலம்பெயர் தொழிலாளர்கள் விளக்கம்

1 Min Read

சென்னை, மார்ச் 5- தமிழ்நாட்டில் முழு பாதுகாப்புடன் இருப்பதாக புலம்பெயர் தொழிலாளர்கள் விளக்கமளித்து உள்ளனர். தமிழ்நாட்டில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். சொந்தக் காரணங்களுக்காக ஊருக்கு செல்வதை தவறாக சித்தரித்து வதந்தி பரப்புவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

பணிபுரியும் இடங்களிலும் தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். தமிழர்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நாங்கள் சமூகமாக இருக்கிறோம் என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பண்டிகைகள் நெருங்குவதால் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது ஹோலிக்காக ஊருக்கு செல்லும் நாங்கள் விரைவில் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து விடுவோம் என்றும் கூறினர். பணிபுரியும் இடங்களில் 4 புலம்பெயர் தொழிலாளர்களும் தமிழர்கள் 20 பேர் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் உணவு நேரத்தில் அனைவரும் சேர்ந்தே உணவருந்துகிறோம் – எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *