கழகத் தலைவர் உடல்நலம் கருதி மார்ச் 6 முதல் 10 ஆம் தேதிவரையிலான சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு!

1 Min Read

பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 40 நாள்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சார சுற்றுப் பயணத்தை கழகத் தலைவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று (5.3.2023) நன்னிலத்தில் உரையாற்றி முடித்த நிலையில், உடல் சோர்வும், உடல்வலியும் கூடுதலாக இருந்ததாலும், வைரஸ் ஜூரம் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், கழகப் பொறுப்பாளர்களின் வேண்டுகோள்படியும் தவிர்க்க முடியாத சூழலில், மார்ச் 6 ஆம் தேதிமுதல் மார்ச் 10 ஆம் தேதிவரை எஞ்சியிருக்கும் கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

அடுத்த பயணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தோழர்கள் பொறுத்திடுக!

– கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *