பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள்- மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வென்று சாதனை

1 Min Read

அரசியல்

வல்லம், மார்ச் 6- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ் வொரு ஆண்டும் மண்டல அள விலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்று சாதனை படைத்து வருகின்றார்கள்.

இந்த ஆண்டு மயிலாடுதுறையில் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளான வளைபந்து(Tenni Koit) மற்றும் எறிபந்து (ThrowBall)விளையாட்டுப் போட்டிகளில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதலிடம் வென்று சாதனை படைத்துள் ளனர். 

மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெற தகுதிப்பெற்றுள்ளனர்.

மேலும் அங்கு நடைபெற்ற ஈட்டி எறிதல்(Javelin Throw)மற்றும் வட்டு எறிதல் (Discus Throw) ஆகிய போட்டிகளில் முதலிடம் வென்றார் மாணவி க.ராஜவேணி. 

கூடைப்பந்து (Basket Ball) மற்றும் கைப்பந்து(Volley Ball)  போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றதுடன், பூப்பந்து (Ball Badminton)  மற்றும் கைப்பந்து போட் டிகளில் மூன்றாம் இடத்தையும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை இக்கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர். இரா.மல்லிகா பாராட்டினார். 

இந்நிகழ்வில் துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் உடற் கல்வி இயக்குநர் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *