கரூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

அரசியல்

கரூர், மார்ச். 6– கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.குமாரசாமியின் இல்லத்தில் 12.2.2023 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ப.க. மாவட்ட தலைவர் த.சி. அக்பர் தலைமை யேற்றார். 

வருகை தந்த அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ம.பொம்மன் வர வேற்றார்.

தொடர்ந்து ப.க. பொதுச் செயலாளர் வி.மோகன் இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம், அவசியம் பற்றி எடுத் துக் கூறி அது தொடர்பாகவே வருகை தந்தவர்களை கருத்து கூறிட அழைத்தார்.

பசுபதிபாளையம் காளி முத்து, முத்தாலம் பட்டி ராம சாமி, பசுபதிபாளையம் ஜெக நாதன், காந்திகிராமம் ராஜா, கட்டிப்பாளையம் காவிரி கு.கோ, தவிட்டுப்பாளையம் குமாரசாமி, வீரமணி, விஜயன், கதிரா நல்லூர் சண்முகம், கிருஷ் ணராயபுரம் பெருமாள், தாந் தோன்றிமலை வெ. ராஜு ஆகி யோர் தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.

தொடர்ந்து நாமக்கல் மாவட்ட பொதுவாழ் கழக தலை வர் வழக்குரைஞர் இளங்கோ உரையாற்றினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் வீர.முருகன் கருத்துகளை பதிவு செய் தார்.

மாநில அமைப்பின் சார்பில் வருகை தந்த பகுத்தறிவு ஆசிரி யரணி தலைவர் தமிழ் பிரபாகரன் ஆசிரியர் பணி கட்டமைக் கப்பட வேண்டியது அவசியம், இன்றைய சூழலில் ஆசிரியர்களு டைய நிலை, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி தெளிவாக கூறினார்.

அவரை தொடர்ந்து பொதுச் செயலாளர் வி.மோகன் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டிய தன் அவசியம் என்ன என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக பேசிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் இந்த இயக்கம் அய்யா பெரியார் இல்லா விட்டால் நமது நிலை என்பதில் தொடங்கி, இன்றைக்கு நாம் பட்டம் பதவிகள் பெற்று இருக் கிறோம், வசதியாக வாழ்கி றோம்… 

இந்த வாழ்க்கைக்கு அடிப்படை யார்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? நாடு இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?என்பதை கூறி பகுத்தறிவாளர்கள் செய்ய வேண்டியது என்ன? அடுத்த தலைமுறையை காக்க வேண் டியது ஒவ்வொருவருடைய கடமை என்று கூறி அதற்கான வழிமுறைகளை தெரிவித்தார்.

இறுதியாக தலைமை ஏற்ற த.சி. அக்பர் ஏப்ரல் மாதம் மீண் டும் ஒரு கலந்துரையாடல் கூட் டம் நடத்துவதாகவும் அதில் இன்னும் ஏராளமான தோழர் களை இணைத்து நடத்துவதா வும் கூறி வருகை தந்த அனை வருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *