சென்னை, மார்ச் 6- தமிழ் நாட்டில் சளி, இருமலுடன் வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலை கட் டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழு வதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச் சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந் திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் சளி, இருமலுடன் வேக மாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச் சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனை களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நட வடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், சளி, இருமலுடன் வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத் தும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித் தார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், புதுவகை வைரஸ் காய்ச் சல் வேகமாக பரவி வரு வதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநி லம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம் கள் நடத்தப்படும்.
காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரி சோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.
பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருத்தல் போன்ற சுய கட்டுப் பாட்டு முறைகளை கடைப்பிடிப்பது நல்லது என்று அவர் கூறினார்.