சென்னை, மார்ச் 6- மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங் களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நேற்று (5.3.2023) கலந்துரையாடி னார். கலந்துரையாடலை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:
உங்களைத் தேடி நாங்கள் வந்திருக் கிறோம். அரசை தேடி மக்கள் சென்ற நிலை மாறி, எங்கள் அரசு மக்களை தேடிச்சென்று கோரிக்கைகளை நிறை வேற்றி வருகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை உருவாக்கி அந்த பணியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். நீங்களும் இங்கே ஆர்வத்தோடு வந்து, ஆர்வத்தோடு மட்டுமல்ல, ஒரு நம்பிக் கையோடு வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையோடு உங்கள் பிரச்சினை களை எல்லாம் இங்கே சொல்லி இருக்கிறீர்கள். குறிப்பாக குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக் காக சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். நிச்சயமாக அதை பரிசீலிப்போம். அதேபோல, இந்தப் பகுதி விவசாயிகள் சார்பாக சில முக்கிய கருத்துக்களையும் தெரிவித்தீர்கள். அவற்றின் மீது உரிய நடவடிக்கை நிச்சயமாக நாங்கள் எடுப்போம்.
விவசாயிகளுடைய வருமானத்தை பெருக்க வேண்டும். விவசாயிகளுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஒரு தனி கொள்கையை வகுத்திருக் கிறோம். தேர்தல் நேரத்தில் ஒரு வாக்குறுதி தந்தோம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவோம், சட்டமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று சொன் னோம். அந்த அடிப்படையில், சட்ட மன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்து வருகிறோம். இப்போதும், வருகிற 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு, அடுத்ததாக வேளாண் துறை நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்யப்போகிறோம். வெறும் நிதிநிலை அறிக்கையை மட்டும் தாக்கல் செய்துவிட்டு போய்விட மாட்டோம். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறபோது, ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட வணிகர்கள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்திருக்கின்ற அதிகாரி களை எல்லாம் அழைத்துப் பேசி, என்னென்ன திட்டங்களை நிறைவேற் றலாம், எதற்கு வரிவிலக்கு அளிக்கலாம், எதற்கு எல்லாம் வரிகள் விதிக்கலாம் என்று கருத்துக்களை கேட்டு, சம்பந்தப் பட்டவர்களின் அறிவுரைகளையும் கேட்டு, அந்த அடிப்படையில்தான் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வார்.விவசாயம் சார்ந்திருப் பவர்களின் கருத்துக்களை கேட்டுத் தான் வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே, இப்போது நீங்கள் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளை நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். அதேபோல, தேனி மாவட்ட தோட்டக்கலை பயிர் விவசாயிகள் முக்கியமான கருத்துக் களை, கோரிக்கைகளை முன் வைத் திருக்கிறீர்கள். அதையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என் கின்ற அந்த உறுதியை அளிக்கிறேன். அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை களை தெரிவித்திருக்கிறீர்கள். அதை யும் அரசு பரிவோடு பரிசீலிக்கும்
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை எப்படி இருந்தது என்று உங்களுக்குத் தெரியும். எவ்வளவு கடுமையான சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பேற்றோம், கரோனா ஒரு பக்கம், நிதிநிலை ஒரு பக்கம். இதை யெல்லாம் சமாளித்து ஓரளவு பணி செய்து கொண்டிருக்கிறோம். அறிவித்த எல்லா திட்டங்களையும் நிறை வேற்றிவிட்டோம் என்று சொல்ல வில்லை. இன்னும் சில திட்டங்கள் மீதம் இருக்கிறது.
அதையும் நிறைவேற் றக்கூடிய சூழ்நிலையில்தான் எங்களு டைய பணி அமைந்திருக்கிறது.
அரசு எதை எதை செய்யுமோ, எதை எதை செய்ய முடியுமோ அதைத்தான் செய்வார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு, நீங்கள் காத்திருங்கள், உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறைவேற் றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.