குன்னூர் – கூடலூரில் ‘திராவிடம் வெல்லும்’ பொதுக்கூட்டம்

1 Min Read

நீலமலை மாவட்டக் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

குன்னூர், மார்ச் 7, நீலமலை மாவட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் ‘திராவிடம் வெல்லும்’ என்ற  தலைப்பில் உதகை, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறப்பாக பிரச்சாரம் பொதுக் கூட்டம் நடத்துவது என்று நீல மலை மாவட்டக் கழக கலந்துரை யாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

தீர்மானங்கள் வருமாறு:

இயக்க வளர்ச்சிக்காக இயக்கத் தோழர்களை அரவணைத்து இயக்கத்திற்கு வலு சேர்ப்பதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை நீலமலை மாவட்டத்தில் பெரு வாரியான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற வைத்து ‘திராவிடம் வெல்லும்’ ‘திராவிடம் வெற்றி பெறும்’ என்ற உறுதியை நிலைநாட்டுவோம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் ‘விடுதலை’ சந்தாக்களை அதிக அளவில் சேர்ப்பதென தீர்மானிக் கப்படுகிறது.

இக்கூட்டத்திற்கு மரு.கவுதமன் தலைமை தாங்கினார்.

மண்டலத் தலைவர் ஆ.கருணா கரன், மாவட்ட செயலா ளர் மூ.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யா.சத்தியநாதன் நன்றியுரை கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *