ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 7.3.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ‘ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சிசோடியா கைது குறித்து எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; மேலும், ஆளும் கட்சி அதை பலவீனப்படுத்த அல்லது தோற்கடிக்க நிறைய செய்யக் கூடும் என்றாலும், இத்தகைய முயற்சியில் அரசாங்கம் பங்கேற்க முடியாது மற்றும் பங்கேற்கக் கூடாது; அல்லது அதன் ஏஜென்சிகள் எதுவும் தவறாக பயன்படுத்தப்பட க்கூடாது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மனுக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்: கள ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அப்படியா?

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்பு, ஜாதி மற்றும் நிறத்தின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் இல்லை என்றும்.  ‘இந்திய மக்களில் 70% பேர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் படித்தவர்கள்’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தத்தை” பாஜக பின்பற்றுகிறது என்றும், அவர்களின் சித்தாந்தத்தின் இதயம் “கோழைத்தனம்” என்றும் ராகுல் காந்தி லண்டனில் குற்றச்சாட்டு.

தங்களை ஹிந்து மதத்தில் இருந்து நீக்கி தனி மதமாக அறிவிக்க கோரி, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த சாமியார்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *