பசுவதையை உடனடியாக தடை செய்ய வேண்டுமாம்! புராணக் கதைகளை ஆதாரங் காட்டி அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனையாம்

Viduthalai
3 Min Read

அரசியல்

அலகாபாத், மார்ச் 7 பசுவை, பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்தபிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட் ஜெட்டில் பசுக்களின் பராமரிப்புக்காக ரூ.750 கோடிஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் உத்தரப்பிரதேசம் முழுவதும் பல பகுதிகளில் கோசாலை அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பசுவதையை தடுக்க சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பசுவதை தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரூ.5 லட்சம் வரை அபராதமும், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி கிராமத்தை சேர்ந்தமுகமது அப்துல் காலிக் என்பவர்மீது பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரி அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய் தார். நீதிபதி ஷாமிம் அகமது விசா ரணை நடத்தி, முகமது அப்துல்காலிக் கின் மனுவை சமீபத்தில் தள்ளுபடி செய்தார். அப்போது நீதிபதி முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது: நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டி யது நமது கடமை. ஹிந்து மதத்தில் சிவன், விஷ்ணு, இந்திரன் என பல்வேறு கடவுள்களுடன் தொடர்பு உடைய பசு, தெய்வீகமாக போற்றப்படுகிறது.

சிவபெருமானின் வாகனமாக நந்தி தேவர் வீற்றிருக்கிறார். பாற்கடலை கடைந்தபோது தோன்றிய காமதேனு, இந்திரலோகத்தில் வசிக்கிறது. கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணருக்கும் பசுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  பசுவின் 4 கால்களும் 4 வேதங்களையும், முகம் சூரிய, சந்திர னையும், தோள் அக்னியையும் குறிக் கிறது. ரிக் வேதம், மகாபாரதத்தில் பசுக்களின் புனிதம் போற்றப்பட்டிருக் கிறது. பசுக்களை கொலை செய்பவர்கள் நரகத்தில் கடுமையாக அவதிப்படுவார்கள் என்றுபுனித நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், மனித குலத்தின் வளர்ப்பு தாயாக பசு விளங்குகிறது. சுருக்கமாக சொல்வ தென்றால் உலகத்தின் தாயாக பசு விளங்குகிறது. இந்தியாவில் வேத காலத்தில்இருந்தே பசு வதை தடை செய்யப்பட்டிருக்கிறது. மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களில் பசுவதை தடை தெளிவாக குறிப்பிடப்பட் டிருக் கிறது. கடந்த 19, 20-ஆம் நூற்றாண்டில் பசுக்களை பாதுகாக்க மிகப்பெரிய இயக்கங்கள் நடத்தப்பட்டன.இன்றைய சூழலில், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக ஒன்றிய அரசு அறி விக்க வேண்டும். பசுவதையை உடனடி யாக தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய  அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் பசு வதை தடுப்பு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு அதிதீவிரமாக எடுக்க வேண்டும். உத்தர பிரதேச பசுவதை தடுப்புச் சட்டம் 1955இ-ன்படி மனுதாரர் முகமதுஅப்துல் காலிக் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மனுதாரர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீதானவழக்கை ரத்து செய்ய முடியாது.வழக்கை தொடர்ந்து விசா ரிக்கலாம்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுபற்றி உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர்  கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழு மனதோடு வரவேற்கிறோம். இதில் ஒன்றிய அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *