சென்னை, மார்ச் 7 தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்து மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இதன்படி, குரூப் 1, குரூப் 2 பிரிவில் இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இதேபோல், இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையிலும் மும் முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், டெல்டா அல் லாத மாவட்டங்களில் குரூப்-1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை, இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். குரூப்-2 பகுதிக்கு பகல் நேரத்தில் காலை 9.30 மணியில் இருந்து பிற்பகல் 3.30 மணி வரை, இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதி காலை 4 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் அறிவிப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books