புதுடில்லி, மார்ச் 7- நீதித்துறையின் சுதந்திரம் துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண் என்று உச்சநீதிமன்ற நீதி பதி ஹிமா கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க தலை நகர் கொல்கத்தாவில் கடந்த 4.3.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நாடாளுமன்றம், நிர் வாகம் மற்றும் நீதித்துறை ஒன்றுக்கொன்று இணை யாகப் பணியாற்ற வேண் டியது மிகவும் முக்கியம். இது நீதித்துறையின் சுதந் திரம், தன்னாட்சி மற்றும் பாரபட்சமற்ற தன்மை யைப் பாதுகாக்கும். இந் திய அரசியல் சட்டம் குறித்த விவாதத்தில் நீதித் துறையின் பங்கை அங்கீக ரிப்பது முக்கியம்.
நீதித்துறையின் சுதந்தி ரம் என்பது துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்ப டைத் தூண். தனது சுதந் திரம் மற்றும் ஒருமைப் பாட்டை பராமரிப்பதில் வியூப்பூட்டுகிற திறனை யும் உறுதியையும் இந்திய நீதித்துறை வெளிப்படுத்தியுள்ளது. என்றார் அவர்.