மகளிர் தினத்தையொட்டி தெலங்கானாவில் நாளை பெண்களுக்கு அரசு விடுமுறை

Viduthalai
1 Min Read

அய்தராபாத், மார்ச் 7- நாளை 8ஆம் தேதி பன்னாட்டு மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை யொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலங்கானா மாநில தலைமை செயலா ளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8ஆம் தேதிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவி னர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனு தவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.

தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *