ஈச்சங்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் – பெரியார் படம் வழங்கல்!

1 Min Read

அரசியல்

தஞ்சாவூர், மார்ச் 8 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில்   பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு நடைபெற்ற பெரியார் 1000 வினாடி வினா போட்டி செப்டம்பர் மாதம் நடைபெற்றது. வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்குப் பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

தலைமை ஆசிரியர் செந்தாமரை வழிகாட்ட லில் இந்நிகழ்விற்கு உதவி தலைமை ஆசிரியர் புத்தன் தலைமை வகித்தார். நெல்லுபட்டு அ.இராம லிங்கம் தேர்வு மய்ய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். பெரியார் ஒளிப்படம் வழங்கினார்.    

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் அ.ரகமதுல்லா வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசியதாவது:

பெரியார் 1000 வினாடி வினா பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. பெரியாரின் வாழ்க்கை வர லாற்றை அறிந்து கொண்டு மாணவர் சமுதாயம் முன்னேற வேண்டும் எனவும், எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்குப் பிறகு தான், பெரியார் ஏற் படுத்திய சமூக மாற்றத்தால் தான் இன்று பெண்கள் கல்வி சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு வகை யான சலுகைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்தது. சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகளை முழுமூச்சாக கொண்டு வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் கருத்துகளை, மாணவ சமுதாயம் உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என பேசினார்.

தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற் கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், பாலசந்திரன், கணேசன் ஆகியோர் செய்திருந் தனர். நிறைவாக முதுகலை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *