சென்னை அம்பத்தூர்: பெரியார் 1000 வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

1 Min Read

அரசியல்

அம்பத்தூர், மார்ச் 8 பெரியார் 1000 வினா- விடை தேர்வு பரிசு வழங்கும் விழா- சென்னை அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 6.3.2023 

அன்று காலை 9 மணிக்கு தலைமை ஆசிரியர் சி.வனிதா ராணி தலைமையில் நடைபெற்றது. எம்.கே.பி.நகர் தலைவர் சதாசிவம் தேசிய கொடி ஏற்ற இரா.தெய்வமணி முதல் பரிசு வழங்க சி.கே.துரை பதக்கமும் சான்றிதழும் வழங்கினார்.

நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிக்க.  மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன் தெற்கும் வடக்கும் புத்தகத்தையும், அம்பத்தூர் பகுதி கழகத் தலைவர் பூ.இராமலிங்கம் பெரியார் படத்தையும் வழங்கினர். அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் ச.இரணியன், ஆவடி நகர செயலாளர் இ.தமிழ்மணி, ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வளர்மதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *