அகமதாபாத், மார்ச் 8- அரபிக்கடலில் மீன் பிடிக்கச் சென்று, தவறுதலாக பாகிஸ்தான் கடற்பகுதிக்குச் சென்றுவிடும் குஜராத் மாநில மீனவர்களை அந்நாட்டு கடற்பகுதி பாதுகாப்பு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கணக்குப்படி, குஜராத் மீனவர்கள் 560 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.