தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – பீகார் ஆய்வு குழு அதிகாரி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை, மார்ச் 8- சென்னை, தமிழ் நாட்டில் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவ தாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் தகவல் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் தமிழ் நாட்டில் மற்ற மாநில தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப் படவில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. 

இதையடுத்து சமூக வலை தளங்களில் பரவிய வீடியோ உண் மையா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய பீகாரில் இருந்து ஆய்வு குழு வந்தது. அப்போது விசாரணையில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படு வதாக கூறப்படும் தகவல் பொய் யானது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாநில தொழிலா ளர்கள், வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசிய பீகார் அய்.ஏ.எஸ். அதிகாரி பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

சமூக வலைதளத்தில் வந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்யும் வகையில் இங் குள்ள சூழல் காட்டுகிறது. கோவை, திருப்பூரில் வடமாநில தொழிலா ளர்களை சந்தித்து பேசினோம். எவ்வித குழப்பமும் இல்லை. சென்னையில் பீகார் மாநில அசோசியேஷன் மற்றும் தொழி லாளர்களை சந்தித்து பாதிப்பு உள்ளதா என கேட்டோம். அந்த காட்சிப்பதிவு வந்தவுடன் தமிழ் நாடு அரசு வேகமாக செயல்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எங்களுக்கு தமிழ் நாடு அரசு அதிகாரிகள் நல்ல ஒத் துழைப்பு கொடுத்தார்கள். காட் சிப்பதிவு பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால் இப்போது அந்த பயம் நீங்கி விட்டது. எல்லாம் தெளிவாகிவிட்டது. அது போலி காட்சிப்பதிவு, நம்ப வேண்டாம் என்று தமிழ்நாட்டில் தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவித்து இருக்கிறோம். முழு நம்பிக் கையை ஏற்படுத்தி இருக்கிறோம். நாங்கள் இந்த ஆய்வின் போது பீகார் மாநில தொழிலாளர்களிடம் பெற்ற தகவல்களை முழு அறிக் கையாக தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து பீகார் குழுவினர் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரி களை சந்தித்தனர். சென்னை, திருப்பூர், கோவையில் நடந்த சந்திப்பு குறித்து விளக்கி பேசினார் கள். கடந்த 3 நாட்களாக நடந்த ஆய்வுக்கு பிறகு இன்று பீகார் புறப்பட்டு செல்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *